எர்சினியா பெசுட்டிசு (Yersinia pestis, மாற்று ஒலிப்பு:யெர்சினியா பெஸ்டிஸ்) ஓர் கோலுயிரி ஆகும். இது ஓர் பாக்டீரியாவுமாகும்.[1] அரையாப்பு பிளேக்கு நோய்த்தொற்றுக்கு நோய்க்காரணியாக இது அடையாளம் காணப்பட்டடுள்ளது. இதனால் குருதிநச்சு பிளேக்கு, வளியிய பிளேக்கு போன்ற மற்றவகையான பிளேக் நோய்களும் உண்டாகின்றன.[2] இந்த மூன்று வகையான பிளேக்கு நோய்களும் மனிதவரலாற்றில் உலகின் கூடுதலான நோயிறப்புக்கள் உண்டான பெரும் பிளேக், கறுப்புச் சாவு போன்ற பல கொள்ளைநோய்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன. 1347க்கும் 1353க்கும் இடையே கறுப்புச் சாவின்போது மட்டுமே ஐரோப்பாவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒருவர் இறந்துள்ளனர்.
இந்தக் கோலுயிரியை மருத்துவர் அலெக்சாண்டர் எர்சின் 1894இல் ஆங்காங்கில் ஏற்பட்ட பிளேக் தொற்றுநோயின்போது கண்டறிந்தார்.[3] அப்போது எர்சின் பாஸ்டர் கழகத்திற்காக பணிபுரிந்து வந்தார். அப்போது இதற்கு பாஸ்டரெல்லா பெஸ்டிஸ் என்று பெயரிடப்பட்டது. 1967இல் இதனைக் கண்டறிந எர்சினின் நினைவாக எர்சினியா பெசுட்டிசு என்று மறுபெயரிடப்பட்டது. தற்போது இதன் மூன்று பல்வகைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
எர்சினியா பெசுட்டிசு (Yersinia pestis, மாற்று ஒலிப்பு:யெர்சினியா பெஸ்டிஸ்) ஓர் கோலுயிரி ஆகும். இது ஓர் பாக்டீரியாவுமாகும். அரையாப்பு பிளேக்கு நோய்த்தொற்றுக்கு நோய்க்காரணியாக இது அடையாளம் காணப்பட்டடுள்ளது. இதனால் குருதிநச்சு பிளேக்கு, வளியிய பிளேக்கு போன்ற மற்றவகையான பிளேக் நோய்களும் உண்டாகின்றன. இந்த மூன்று வகையான பிளேக்கு நோய்களும் மனிதவரலாற்றில் உலகின் கூடுதலான நோயிறப்புக்கள் உண்டான பெரும் பிளேக், கறுப்புச் சாவு போன்ற பல கொள்ளைநோய்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன. 1347க்கும் 1353க்கும் இடையே கறுப்புச் சாவின்போது மட்டுமே ஐரோப்பாவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒருவர் இறந்துள்ளனர்.
இந்தக் கோலுயிரியை மருத்துவர் அலெக்சாண்டர் எர்சின் 1894இல் ஆங்காங்கில் ஏற்பட்ட பிளேக் தொற்றுநோயின்போது கண்டறிந்தார். அப்போது எர்சின் பாஸ்டர் கழகத்திற்காக பணிபுரிந்து வந்தார். அப்போது இதற்கு பாஸ்டரெல்லா பெஸ்டிஸ் என்று பெயரிடப்பட்டது. 1967இல் இதனைக் கண்டறிந எர்சினின் நினைவாக எர்சினியா பெசுட்டிசு என்று மறுபெயரிடப்பட்டது. தற்போது இதன் மூன்று பல்வகைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.