ஆவாரை (ஒலிப்பு ), ஆவிரை அல்லது மேகாரி (Cassia auriculata) என்பது ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். இது ஒரு சங்க கால மலராகும்.
நீரிழிவு, மேக நோய்கள், நீர்கடுப்பு, உள்ளங்கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கான மருத்துவத்திற்கு பயன்படுகிறது. ஆவாரை இலையை பாசிப்பருப்பு, பூலாங்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து உடலிற் பூசிக் குளித்துவர உடல் அரிப்பு, உடல் வெப்பம் ஆகியவை குறையும். ”ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோ ?” என்பது சித்த மருத்துவப் பழமொழி.
ஆவிரை என்பது இக்காலத்தில் ஆவாரம்பூ என வழங்கப்படுகிறது. தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம்பூவை இக்காலத்திலும் பயன்படுத்துகின்றனர்.
சங்க காலத்தில் மடல்-மா ஏறி வருகையில் பயன்படுத்தப்பட்ட இந்தப் பூ தைப்பொங்கல் விழாவில் பயன்படுத்தப்படும் பூவாக மாறியுள்ளது.
தொல்காப்பியர் இந்த மரவினத்தைக் குறிப்பிடுகிறார். ஆவிரை என்னும் மரப்பெயர் அதன் பகுதிகளைக் குறிக்கும்போது ஆவிரங்கோடு, ஆவிரஞ்செதிள் (பட்டை), ஆவிரந்தோல், ஆவிரம்பூ – என வரும் என்கிறார் [1]
குறிஞ்சிப்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் ஒன்றாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.[2]
தலைவியை அவளது பெற்றோர் அவள் விரும்பும் தலைவனுக்குத் தர மறுத்தால் ஊரில் மடலூர்ந்து வந்து பெறப்போவதாக அந்தத் தலைவன் குறிப்பிடுகிறான். பனைமட்டைகளால் குதிரை செய்வானாம். அதற்கு ஆவிரம்பூ மாலை சூட்டுவானாம். இன்னாள் இவ்வாறு வரச்செய்தாள் என எழுதி அதன்மேல் வைத்திருப்பானாம். இதனைப் பார்க்கும் ஊரார் அந்தத் தலைவன்-தலைவியரைக் கூட்டுவிப்பார்களாம்.[3]
மடல்மா மேல் வரும் ஒருவன் அக்குதிரைக்கு மயில்பீலி, பூளாப் பூ, ஆவிரை (ஆவாரம்பூ) ஆகியவற்றைச் சூட்டியிருந்தானாம்.[4]
ஆவிரை மலரையும் எருக்க மலரையும் சேர்த்துக் கட்டிய மாலையை அவன் அணிந்திருந்தானாம்.[5]
காதலர் இருவர் ஆவிரை மலர்மாலை அணிந்துகொண்டு பல ஊர் மன்றங்களில் இன்னிசை முழங்க ஆடினார்களாம்.[6]
ஆவாரை (ஒலிப்பு ), ஆவிரை அல்லது மேகாரி (Cassia auriculata) என்பது ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். இது ஒரு சங்க கால மலராகும்.
తంగేడు ఒక విధమైన ఔషధ మొక్క. దీని వృక్ష శాస్త్రీయ నామం కేషియా ఆరిక్యులేటా. బంజరు భూముల్లో, ముఖ్యంగా చిట్టడవుల్లో ఎక్కువగా పెరుగుతుంది. మొక్క చాలా అందంగా వుండి, బంగారు రంగులో వుండే పూలు గుత్తులుగా, కొమ్మల చివర పెరుగుతూ, తొలకరి వానల అనంతరం దర్శనమిస్తాయి. వీటిని గొబ్బిపూలు అని కూడా అంటారు. ముఖ్యంగా సంక్రాంతి పండుగ వచ్చే మాసంలో, ముగ్గులపై అలంకరించడం, పేడ ముద్దలపై గుచ్చి, గొబ్బెమ్మలుగా పెట్టడం చేస్తూ వుంటారు. ఈ రకమైన ఆచారం వీటికి దైవత్వం ఆపాదించడానికి విధించినదేనని, ఆ మొక్కలోని ఔషధ ప్రాముఖ్యం తెలియజేయడానికే మన పూర్వీకులు ఈ విధమైన ఆచారాలను పాటించారని తెలుస్తుంది.
బాగా పెరిగిన తంగేడు మొక్క రెండు మీటర్ల ఎత్తు వరకు పెరుగుతుంది. బహువార్షికమయినందున, సంవత్సరం పొడవునా దొరుకుతుంది. కణుపునకు ఒకటి వంతున సంయుక్త పత్రాలు ఏర్పడతాయి. పత్రాలు చింతాకుల వలె ఉండి, కొంచెం పెద్దవిగా వుంటాయి. ఫలాలు తప్పిడిగా, పొడవుగా ఏర్పడతాయి. ఈ మొక్కను మెరక తంగేడు, తంగేడు, తుంగేర, గొబ్బిపూలు అని అనేక పేర్లతో పిలుస్తారు. సంస్కృతంలో చరమ రంగ లేక మాయహరి, ఆవర్తకి, పీఠకిలక, తిమిరిహరి అని అనేక నామాలున్నాయి. ఆంగ్లంలో టానర్స్ కాషియా లేక టానర్స్ సెన్నా అని, శాస్త్రీయంగా కేషియా ఆరిక్యులేటా లేక సెన్నా ఆరిక్యులేటా అని పిలుస్తారు. ఇది సీసాల్పినియేసి అనే కుటుంబానికి చెందినది. ఈ మొక్క బెరడులో టాన్లి ఎక్కువగా ఉన్నాయి. మొక్క సమూలంలో బీటా సైటోస్టీరాల్, గ్లైకోసైడ్లు ఉన్నాయి. ఆయుర్వేదంలో మధుర, రూక్ష, పిత్త, వాత కఫ హర గుణాలున్నట్టు పేర్కొన్నారు.
తంగేడు పూల రెమ్మల కషాయం మధుమేహానికి దివ్యౌషదం. పరగడపున 15 రెమ్మలను గ్లాసుదు నీళ్ళతో మరగింఛి ఛల్లార్ఛి సేవింఛాలి. సేవనం తర్వాత ఒక గంట వరకు ఏమీ తినరాదు.
[1] మందుమొక్క - డా.ఎస్.వేదవతి
|website=
(help)